பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

என்று சொல்லிவிட்டு நரி ஒரு ஆழாமான பொந்திற்குள் சென்றுவிட்டது.

நரிக்கு நூறு யோசனைகள் தெரியும். எனவே அது செய்வது சிறந்ததுதான் என்று எண்ணிய நாரை, நரியை பின் தொடர்ந்து தானும் பொந்திற்குள் சென்றது.

நரியை நாரை துரத்துவதை இதுவரை கண்டிராத வேடன், பொந்தின் அருகில் சென்று கையை விட்டு நாரையின் இரு கால்களைப் பிடித்து வெளியே எடுத்தான். நாரையின் இறகுகள் துவண்டு போய் இருந்தன. கண்கள் வெளிறிக் கிடந்தன. இதயத் துடிப்பு அநேகமாக நின்றுவிட்டது.

இங்த வளைக்குள் மூச்சுத் திணறியிருக்கிறது. போலும் என்று எண்ணிய வேடன் நாரையை அருகில் இருந்த புல்தரையின் மீது வீசி எறிந்தான். மறுபடி வேடன் வளைக்குள் கையை விட்டு நரியின் வாலை பிடித்து வெளியே இழுத்தான்,