பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

அணிலின் மூக்கை ஒரு புல் வெட்டிவிட்டது. மூக்கில் காயம் ஏற்படவே, அணிலுக்கு கோபம்வந்தது. இந்தப்புல்வெளியில் உள்ள புற்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகப் போகட்டும் என்று அணில் ஆத்திரத்துடன் கத்தியது. இவ்வாறு |சபித்து விட்டு அணில் வீட்டுக்கு ஒடிப் போய் விட்டது.

அடுத்த நாள் அது புல்வெளிக்கு ஓடி வந்தது. அப்பொழுது புல்வெளியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அணில் பயங்து விட்டது; உதவிக்கு இதர அணில் களைக் கூப்பிட்டது. ஐயோ சிக்கிரமாக ஏரிக்குச் சென்று உங்கள் வாயில் தண்ணிர் கொண்டு வாருங்கள்; ஊம். சீக்கிரம் போங்கள் என்று குட்டி அணில் கத்தியது. எல்லா அணில்களும் தண்ணிரைக் கொண்டு வந்து புல்வெளியில் ஊற்றின. ஆனால் ஒரு புல் கூட மிஞ்ச வில்லை. எல்லாம் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. அணில்களுக்குப் பசிதாங்க முடியவில்லை, சாப்பிட கொஞ்சம் கூட புல் கிடையாது.