பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - விளையாட்டுக்களின் விதிகள் -

ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார். ‘போராட்டம் நடந்து கொண்டிருக்கும்பொழுது, ஒருவர் உடலின் ஒரு பகுதி ஆடு களத்தினுள் தொட்டுக் கொண்டிருந்தாலும் அவர் உள்ளே யிருப்பதாகவே கருதப்படுவார்.

(ஏதாவது ஒரு பகுதித் தொடர்பு ஆடுகள எல்லைக்குள் இருக்க வேண்டும்.)

4. போராட்டம் தொடங்குகிற பொழுது, ஆடுகளத்துடன் தொடரிடங்கள் இணைந்து விடுகின்றன. போராட்டம் முடிந்தவுடன், அதில் ஈடுபட்டு ஆட்டக்காரர்கள் மட்டும் அவரவர்களுடைய பக்கத்திற்குச் செல்ல, அந்தத் தொடரிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். -

5. பாடுவோர், “கபடி” என்ற சொல்லாலேதான் ஒலியெழுப்பிப் பாடவேண்டும். அவர் கபடி என்று பாடிக் கொண்டிருக்காவிட்டால், அவரைத் திரும்பிப் போகச்சொல்லிவிட்டு, எதிர்க் குழுவினருக்குப் பாடிச்செல்லும் வாய்ப்பை நடுவர் அளிப்பார். இதுபோன்ற சமயங்களில், அவ்வாட்டக்காரரைப் பாடும் வாய்ப்புப் பெற்றோர் விரட்டிச் சென்று தொட முயலக்கூடாது.

6. எதிர்க்குழுவினரின் பக்கத்துக்குச் செல்லும்பொழுது பாடிச் செல்வோர், பாடிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அதை அவர் தாமதமாகச் செய்தால், பாடும் வாய்ப்பை இழந்து தன் பக்கத்துக்குத் திரும்புவதுடன், எதிர்க்குழுவினரும் பாடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதுபோன்ற நிலைகளில், தவறாகப் பாடி வந்தவர் விரட்டப்படக்கூடாது. அந்தப் பக்கத்தில் தொடர்பு இருக்கும் வரை, அவர் விரட்டப்படக் கூடாது.

7. எச்சரிக்கைக்குப் பிறகும், வேண்டுமென்றே 6-வது விதியை மீறுகின்றபாடுபவர்பாடிச்செல்லும் வாய்ப்பை இழக்கிறார். அத்துடன் ஒரு வெற்றி எண்ணையும் (Point) எதிர்க் குழுவினருக்கு நடுவர் அளிக்கிறார். ஆனால், பாடிச்செல்பவர் வெளியேற்றப்பட மாட்டார். 8. பாடிச் சென்றவர் தன் பக்கத்திற்குப் பத்திரமாக வந்து சேர்ந்தாலும், அல்லது எதிர்க் குழுவினரால் பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாலும், மறு குழுவினர் தன்னுடைய குழுவின்

சார்பாக, உடனே, அதாவது5 நொடிகளுக்குள்ளாக ஒருவரைப் பாடிச்

செல்லுமாறு அனுப்பவேண்டும்.இவ்வாறே ஆட்டம் முடியும் வரை,

இரு குழுவினர்களும் தங்கள் குழுக்களிலிருந்து மாறி மாறி பாடிச் செல்பவர்களை அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். - -