பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 விளையாட்டுக்களின் விதிகள் - - b

2. அல்லது வந்திருந்தாலும் ஆடுகளத்திற்குள் ஆட வராவிட்டால்; . - . . 3. ஏற்கெனவே குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு வந்து ஆட்டத்தைத் தொடங்கிட மறுத்துவிட்டால்; -

4. ஆட்டம் தொடங்கிய பிறகு, நடுவரால் ஆட்டம் இடையிலே நிறுத்தப்பட்டோ அல்லது முடிக்கப்பட்டோ இல்லாத நிலையில், ஒரு குழு ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடிட மறுத்துவிட்டால்;

5. ஏதோ ஒரு காரணத்தால் ஆட்டம் இடையிலே நடுவரால் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்குகின்ற பொழுது, ஆட வாருங்கள் என்று நடுவர் அழைத்த பிறகும், 2 நிமிடங்களுக்குள் ஒரு குழு ஆடுவதற்கு வரத் தவறினால், - =

6. ஆட்டத்தைத் தாமதப்படுத்தவும் அல்லது விரைவு படுத்திடவும் கூடிய குறுக்கு வழிகளைத் தெளிவாகவே ஒரு குழு மேற்கொண்டால்; . -

7.நடுவரால் எச்சரிக்கப்பட்டபிறகும் கூட, ஆட்டத்தின் ஏதாவது ஒரு விதியினைத் தொடர்ந்து ஒரு குழு மீறினால்,

8. ஒரு குழுவின் ஒரு ஆட்டக்காரர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படும் பொழுது, அதனை ஏற்காமல் ஒரு நிமிடத்திற்கு மேல் வெளியேறாமல் தாமதம் செய்தால்; -

ஒரு குழுவானது ஆட்டத்தை அதாவது தனது ஆடும் வாய்ப்பை இழந்துவிடும். அதாவது அந்த ஆட்டத்தில் அந்தக் குழு தோற்றதாக அறிவிக்கப்படும்.

அவ்வாறு அறிவிக்கப்பட்டபின், தவறு செய்யாத குழுவானது வென்றதாக அறிவிக்கப்பட்டு, அந்தக் குழுவிற்குரிய வெற்றி எண்ணானது (Point) 7-0 என்ற கணக்கில் குறிக்கப்படும்.

7. பந்தடித்தாடும் முறை (Batting)

1. பந்தடித்தாடுபவர் (Batter) பந்தடித்தாடும் கட்டத்துக்குள் சென்று, தான் அடித்தாடக் கூடிய நிலையில் நின்று கொள்ள வேண்டும்.

2. பந்தை அடித்தாடுகின்ற சமயத்தில், பந்தடித்தாடும் ஆட்டக்காரரின் ஒரு கால் அல்லது இரண்டு கால்களும் பந்தடித்தாடும் கட்டத்தின் கோடுகளைத் தொட்டுக் கொண்டிருக்கக்