பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5.விளையாட்டுக் கொடுமைகள்


“பணக்காரனைச் சுற்றி பத்துப்பேர்; பைத்தியக்காரனைச் சுற்றி பத்துப் பேர்” என்று பழமொழி கூறுவார்கள். மேலை நாட்டுப் பணக்காரர்களுக்கு இது சாலவும் பொருந்தும். பொழுது போகவில்லையே என்று அவர்கள் செய்த பைத்தியக் காரத்தன மெல்லாம், விளையாட்டுக்கள் என்ற பெயரில் எத்தனை எத்தனைக் கொடுமைகளை இழைத்திருக்கின்றன.

இதயமே இல்லாதவர்கள் போலும், இரக்கமே கொள்ளாதவர்கள் போலவும், அவர்கள் பொல்லாத கொடுமையிலே குளித்தெழுந்து களித்து மகிழ்ந்திருக்கின்றனர் என்று வரலாறு வடித்துக் காட்டும் போது, அவர்களைப் பார்த்து வியட்பதா வெறுப்பதா என்ற இக்கட்டான சூழ்நிலையே நமக்குத் தோன்றுகிறது.

ஆதிவாசிகள் தான் அறிவு வளர்ச்சியில்லாமல் அரக்கத் தனமாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்றால், ஆறறிவு படைத்தவர்கள், அனுபவத்தில் லயித்தவர்கள் ஏன் இப்படி நடந்து