பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தானே என்ற முறையில் நடந்தால் வீணான வருத்தமும், விரும்பத் தகாத முடிவுமே கிடைக்கும் என்பதை நாம் நன்றாம் உணர்ந்து கொள்ள வேண்டும் அதே நிலைதான் உடற்பயிற்சியிலும்.

செல்களாலும் திசுக்களாலும் தசைகளாலும் எலும்புகளாலும் இரத்தத்தாலும் ஆன நமது உடலை, உறுப்புக்களே இயற்கையாக இயக்கினால், இனிமையாகவே இயங்கும். தன் குழந்தை சீக்கிரம் வளர வேண்டும் என்று அளவுக்கு மேல் உணவைத் திணித்துக்கொண்டே இருந்தால் குழந்தை வயிறு என்னவாகும்? உண்மையை உணர வேண்டும். அதே நிலை தான் உடற்பயிற்சியிலும்.

பயிற்சியால் பலன் கிடைக்கிறது என்பதை உணர்ந்த ஒரு சிலர் அவசரம், ஆவேசம், பதட்டம், பண்பாடில்லாத செயல் முறையால், வேகமாகச் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும் என்ற விதண்டாவாத முறையில் இயங்கும் போது உடல் முறுக்கேறுகிறது. உன்ளம் கிறுக்கேறுகிறது என்பது உண்மைதான்.

கரையடங்கி ஓடும்போது தான் தண்ணீரைக் கண்டு நாம் மகிழ்கிறோம். கரையுடைத்துக் கொண்டு காட்டாறாகப் போகும்போது, சபிக்கிறோம் அல்லவா! கட்டுக்கடங்காத ஆவலும், அவசரமும் கால விரயத்தை மட்டுமல்ல. தேக நாசத்தையும் அல்லவா உண்டு பண்ணிவிடுகிறது. அவசரப் பட்டு ஆத்திரத்துடன் பயிற்சி செய்யும்பொழுது உறுப்புக்கள் 'பிடித்து'க் கொள்கின்றன. பெரும் முறிவைக்கூட சில சமயங்களில் உண்டாக்கி விடுகின்றன.

அதனால் பயிற்சியே தேவையில்லை என்பது வீணான வாதம். பயிற்சி செய்பவன் முரடனாகின்றான். மனம் பாறை போலாகி விடுகிறது என்றால், படித்தவர்கள் கூட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பண்பாடில்லாமல் நடந்து கொள்