பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 சாரதா மரிப்பதற்கு ஒரு மாதம் முன்னம் எடுக்கப் பட்ட படம். அவருடைய குடும்பத்தின் உருவப்படம் அது. மணிபாலன் - மாலதி : மணி நாதன் - வடிவு : சரவணன் - சாந்தி. இப்படி ஒரு 'செட்'. அடுத்து, மணிமாறன். ஒண்டிக் கட்டை’!... அதோ, பெண்கள் இருவர் : சாருபாலா, சாருமதி !.. இருவரும் அவரவர் புருஷன்மார்களுடன் ! அங்கங்கே குழந்தை குட்டிகள் அவரவர் குடும்பத்துடன்!... நட்ட நடுவில் சிங் றம்பலம்சாரதா ஜோடி !... . . கண்களை மூடிக்கொண்டார் பெரியவர். ஒர் அரைக் கணம் மோன நிலை ! 'சாரதா ! நீ பொய் அல்ல ; நீ தான் நிஜம் ... பொய்யாக இருந்த எனக்கு மெய்யின் உருவம் வழங்கிய தேவி நீ !...” திடுதிப்பென்று அவருக்குத் தமது முதல் இரவின் ஞாபகம் சுடர் தட்டியது. மனத்தை என்னவோ செய்தது. சஞ்சலமும் சிரிப்பும் கை இணைத்து வலம் வந்தன. இதயத்தில் அமைதியை வரவழைக்கவேண்டி, அவர் மாடித் தாழ்வரத்தில் நடந்தார். உடற்பயிற்சிச் சாதனங்கள் கிடந்தன. தன்மயமான கர்வத்திளைப்பில் ஊறினார் அவர். ஆளுயர கண்ணாடி அழைத்தது. போய் நின்றார். நாடகக்காரன் வேடப் பொருத்தத்தைச் சரி பார்த்துக் கொள்ளுவதையொப்ப அவர் பார்த்துக் கொண்டார். நான் இனி எந்த வேடம் கட்டப் போகிறேன் ?... ஏன் அப்படி நினைக்க வேண்டும் ?...' முடிவு என்ற ஒன்றுக்கே அவர் இடம் வைக்க விரும்பார். ஒடும் மட்டும் தேர் ஒடட்டும் !... உடலும் உள்ளமும் அவர் வரை பாதுகாப்புப் பொருள்கள்.