பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iôô לל 'காலம்பற டாக்டரைப் பார்க்கிறேன்!...” அவள் தயங்கிச் சொன்னாள், நழுவ எத்தனம் செய்தாள். முடியவில்லை. கையில் வைத்திருந்த ஊசியில் நூலிழை யைப் பொருத்த முனைந்தாள். "என்ன ராணி ?. ஊசியை வாங்கி வெகுலாவகமாக நூலிழையை நுழைத்தார் அவர். 'வந்து... ஊஹல்ம். ஒண்னுமில்லே!...” அவள் மனத்தில் ஏதோ ஒரு செய்தி தொண்டைக் குழியை விட்டுப் புறப்பட துடிப்பதை அவர் அனுபவ பூர்வமாக உணர்ந்தார். அவள் மனத்தைத் தூண்டி அறிய விழைந்து, அவளது பூங்கரத்தைப் பற்றி இழுத்து அவளது எழிலார் வதனத்தை நிமிண்டி உயர்த்தி, "என்ன ராணி?” என்று வம்பு பண்ணுகையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி, அங்கே மூத்த மகன் பிரசன்னமா யிருக்கக் கண்டுங்கூட, தம் கைப்பிடியை விடாமலிருக் கவே, அந்தப் பெண்ணாகவே திமிறிக் கொண்டு விடுதலை பெற்று, பூஞ்சிட்டாகப் பறக்க வேண்டியவள். ஆனாள்! پیامبر ۲ * , e. ྋ༣༩༢