பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நின்றாள். சிற்றம்பலம் தந்த சாவிக்கொத்தைத் திரும்ப அவரிடம் நீட்டியபோது, ஐந்து ரூபாய் நோட்டு ஒன் றையும் நீட்டினாள். அதை அவர் தம் புதல்வனிடம் கொடுத்தார். அவன் புறப்பட வேண்டியவன் ஆனான். புறப்பட்டால் போதும் என்னும் சுழலுக்கு ஆளான கட் டத்தில் இருந்தவனுக்குவிடை கிடைத்தால் போதாதா என்ன ? பேரனை மருமகளிடம் ஒப்படைத்தார். குளியல றைக்குள் பிரவேசித்தார். ஹம்மிங் ஒலி கிளம்பியது, லங்கோடு திகழ உள்ளே இருந்தவரின் கையில் சோப் டப்பாவைத் திணித்துவிட்டு நகர்ந்தாள் ராணி-பணிப் பெண். . உதயத்தின் கோலம் புள்ளிக் கோலம் இழைக்கத் தொடங்கிவிட்ட பொன்மயமான மாயப் பொழுதல் லவா அது. பூப்பந்தை விட்டெறிந்து மகிழ்ந்த குழந்தை, அப் பூப்பந்து திரும்பி வந்து தன்னிடமே நிற்பதைக் கண்டு முகம் சுளிக்குமே ; அதுபோலத்தான் உள்ளே சந்தோஷத் துடன் நுழைந்து, மீளும் தருணத்தில் சுரத்து இல்லா மலும் இருந்தார் சிற்றம்பலம். அதற்காக, எப்போதுமே நீரிலேயே அமிழ்ந்துவிட விழைபவரும் அல்லர். எதிலுமே ஒரு கட்டுப்பாடும் நியமமும் வேண்டுமே அவருக்கு 1. - * வெகுமதி பெறப்போகும் பாணனின் நிலையில் அவர் மனம் இருந்தது. . . மணிமாறன் சற்றைக்கெல்லாம் வந்துவிடுவான் !... அவருக்குக் கிடைக்கப்போகும் பரிசல் அவனேதான் !... அச்சுத் தொழில் நுட்பக் கல்விக்காக ஜெர்மனிக்கு அர சாங்கத்தின் சார்பில் சென்றவன் அவன் ! அப்பப்பா !... அதற்குள் ஒராண்டு ஓடிவிட்டதா ?... வழியனுப்பி