பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 மணிமாறன் வந்துவிட்டான் ! நாகரிகத்தின் புது மெருகு வெள்ளோட்டம் வந்தது. வாழ்க்கைப் பரிசிலைச் செம்மை பாய்ச்சி செலுத்திக் கெலித்தவருக்கு இப்போது கனவின் பரிசிலாக இதோ, மணிமாறன் நிற்கிறான்-பிரத்தியட்ச உண்மையாக இவன் தொடக்கம் தொட்டுப் படிப்பில் காட்டி வந்த அக்கரை காரணமாக, இவரும் மகன் படிப்பில் அக் கறை செலுத்தலானார். மூத்தவன் வெறும் பட்டம் பெற்றுக்கடையில் ஒட்டிக் கொண்டான். பி. காம். படிப்பு ; அமைதியாக இருந்து விட்டான். இரண்டா மவன் அப்படி இல்லை. நெடுஞ்சாலைப்பிரிவு எஞ்சினியர். திருச்சியில் உத்தியோகம், மூன்றாம் புள்ளி சரவணன். எம். பி. பி. எஸ். தஞ்சாவூரில் வ. உ. சி. நகரில் 'ப்ராக்டிஸ்'. கடைக்குட்டிதான் மணிமாறன். ஒன்றிக் கட்டை, பெண்களையும் நல்ல இடம் பார்த்து, நிதி மிக்க இடங்களிலேதான் கட்டிக் கொடுத்திருந்தார். மணி மாறனுக்கு வெகு விரைவிலேயே மத்திய அரசாங்கத்தில் பொறுப்பான அலுவல் கிட்டிவிடும். கூடிய சீக்கிரமே அவனுக்கு அவன் இஷ்டப்படி கல்யாணம் காட்சி செய்து விடவேணும்!... கணம் ஒன்றோ, இரண்டோ! நினைவுகளோ ஆயிரம்! கனவுகளுக்கோ கணக்கு இல்லை - வாழ்வின் சிக்கலே இதுதான் ; சூட்சுமமும் இதுவேதான் ! - இதோ பிள்ளை பாசத்திற்குப் பாசம் பூப்பலி செலுத்தியது.