பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ராணியைப் பற்றிய அறிமுகத்தைத் தன் தந்தை யின் வாய்மொழியாகக் கேட்ட மணிமாறன் மிகவும் அமைதி கொண்டான். அப்பா படிச்சது அதிகமில்லா விட்டாலும் உலகத்தையும் உலகோரையும் படிச்சது ரொம்ப ஜாஸ்தி!... ரியலி.ஏ.இன்ட்ரடக்ஷன்! எஸ்...! எளிய இனிய தேவதை போலல்லவா தோன்றுகிறாள் இந்தப் பெண்... இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவனுக்கு கூடவில்லை. அவள் போய் விட்டாள். மணிமாறனை நோக்கித் தம்முடைய பார்வையை நாட்டியவேளையில், அவன் தவழ்ந்து சென்ற அழகின் சுவைப்பில் மனம் கிறங்கிப்போனதை இனம் கண்டு கொண்டிருப்பாரோ?... மூத்தவனைக் கடைக்கு ஏவினார். கடல் கடந்து வந்தவனை ஒய்வு கொள்ளப் பணித்தார். - மாலையில் துணிமணி முதலிய பரிசுகளை குடும்பத் தவர்க்குக் கொடுக்க வேண்டுமென்பது அவ்விளைஞனது திட்டம், . சிற்றம்பலம் மாடியை நாடினார். மாலை வந்தது. . மயக்கத்தின் வனப்பும் வந்தது. தன் வரவுபற்றி அறிவிக்க மணிமாறன் பல்கலைக் கழகக் கட்டிடத்துக்குப் போய் மீண்டான். பங்களாவில் பெரியவர் கூட இல்லை.