பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 15 கீழே மூத்த அண்ணி மட்டுமே இருந்தாள். மணிமாறனின் கண்கள் சுற்றிச் சூழ தேடின. ராணி தோட்டப்பகுதியில் நின்றாள். மலர்களின் மல ராக நின்றாள். காலையில் ராணியைப்பற்றிய பிரஸ்தாபம் ஏதாகிலும் யார் வாயிலிருந்தாவது வெளிவருமென்று தான் அவன் எதிர்நோக்கியிருந்தான் - ஏதும்வரவில்லை அதற்கான ஏதும்'இல்லாமல் இருக்கலாமே ?... ராணியைச் சந்தித்துப் பேசினால் மனசுக்குத் தெம் பாகவும் பொழுது போக்காகவும் இருக்கும் என்றெண்ணி னான் மணிமாறன். வயதொத்த யுவனும் யுவதியும் மன மொத்த நண்பர்களாகவே பழகி, தங்கள் தங்கள் நேசத்துககு ஒர் அர்த்தத்தை உண்டு பண்ணிக்கொள்ளு கிறார்கள். இரண்டு நண்பர்கள் பழகுவதில்லையா அப்படி ... இது மேலை நாடுகளிலே வெகு சாதாரணம் !... இங்கே தான் யுவன் - யுவதி நட்புக்குப் புதுப்பொருள் கற்பிக்கிறார்கள் ! காதலென்றும் கூதலென்றும் அண்ணியை எண்ணினான். அவளது இங்கிதப் பண்பில் நம்பிக்கை வைத்து அவன் நடந்தான். அழகே ஒப்பற்ற ஆபரணமாகக் கொண்டு இலங் கினாள் ராணி, - இளமையின் அதீதமான பொலிலே தனக்குக் கிடைத்த ஆடம்பரமான ஒப்பனை என்ற கருவத்துடன் அவள் நின்றாள். - - ராணி ...” நாளம் காட்டி, நகை காட்டி ஒதுங்கினாள் ராணி, "பிஸ்கட் தன்றாக இருந்ததா ?...'