பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 நிலை பயமாக இருக்குது. அவள் இல்லாமல் நான் எப்படி இனி உயிரோடு இருக்க முடியும் ? என்னில் அவளாக இருந்த தெய்வப் பெண் அல்லவா அவள் ... தெய்வப்பெண்...!. தெய்வாம்சம் கூடிய மனைவி!...அவள் மாதிரி இனிமேல் என்னை யார் அப்படிக் கவனிச்சுக்கப் போறாங்க ?.... என்ன கேள்வி இது ?. யாரலே அப்படி என்னை அவ்வளவு உரிமையான கவலையோட பராமரிச் சுக்க இயலும் ?...இத்தனை வருஷத்துக்கும் வாழ்க்கையை நான் கூத்தாக நினைச்சதில்லே! இனிமேல்தான் அப்படி ஆயிடப்போகுது !...வாழ்க்கை என்கிறது வாழ்ந்து ஆக வேண்டுமென்று மனிதனுக்கு விதித்திட்ட ஆண்டவன் கட்டளையா ? ஊஹல்ம், அப்படி நான் ஒத்துக்கிட ஒப்ப மாட்டேன் வாழ்க்கை என்கிறது வாழ்ந்து தீர வேண்டிய கடமை-மனிதனின் கடன் !...அல்வளவே தான் ! ம்...எனக்கும் கடமை இருக்குது 1 ஆமா திஸ் ஒன்லி.இஸ் ட்ரு. வெய்துயிர்ப்பு வெளியேறியது. ஆனால், தன் நிழலை விரட்ட எத்தனிக்கும் பாலகனைப் போன்று ஒர் ஆற்றாமை மட்டும் மிஞ்சியது. 'ஜிம்னாஸ்யம்' ஒன்றின் சொந்தக்காரர் எதிர்ப் பட்டார். அடிநாளைய நட்பு. குசலம் விசாரித்துக் கொண்டனர். அம்மனிதர் தளர்ந்து போயிருந்தார். கைக்கம்பு இல்லையெனில் அவர்பாடு அந்தரம்தான் ! தமிழ் நாட்டின் ஹாலிவுட் பகுதி ஆயிற்றே :பிரபலமான நடிகர் ஒருவரின் அகால மரணம் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அரைக்கணம் அ தி ர் ந் து போனார். பெரிய ஸ்டார் . ஆனார் இப்படித்தான் வாழனும் என்கிற ஒரு அடக்கம் இல்லாமல் கண்டபடி’ வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார், பாவம் மற்றவர் களுக்கு இவர் ஒரு எச்சரிக்கை ஆகிவிட்டார். அந்த வகையில் அவர் பாவம் கழிந்துவிடும்...கழுவாய் கிடைத்துவிடும் !...” -