பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 அதெல்லாத்தையும் சாடாவாய்க் குடிச்சு ஏப்பம் விடுறதுக்கு எனக்கு மனசு இல்லே. ஆனதினாலே, நீயும் அரிசி வாங்கிக்கினு திரும்பினடியும் ரெண்டு பேரும் ஒட்டுக்காக் குந்திக் கஞ்சி குடிக்கலாமேன்னுதான் உனக்காகக் காத்திருந்தேனாக்கும்!' என்றாள் உணர்ச்சி கள் சுழித்தன. 'நல்ல பொண்ணுடி, போ !” “நல்ல ஆத்தாடி ஆத்தா !” தாயும் மகளும் வாய்விட்டும் மனம்விட்டும் சிரித்த இரட்டைச் சிரிப்பில், மூன்றாவதாக ஒரு சிரிப்பும் கூடிக் கலந்தது. அங்கே கங்காணி வீரமுத்துச் சேர்வைகாரனின் அருமந்தப் புதல்வன் வீரமணி காட்சியளித்தான் !