பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

ராணி!...'

இத்தனை அழுகையையும் இது பரியந்தம் அவள் எந்தக் கிட்டங்கியில் சேமித்து வைத்திருந்தாள். ‘என் புள்ளி பிசகி விட்டது . இனி நான் என்ன செய்ய வேண்டும்?. இப்போது ராணிதான் பேசி ஒய்ந்தாளா?... அப்படியென்றால் . அப்படியென்றால்...? தர்மம் அவரை அழைத்ததோ ? மண்டை ஒடு கொதித்தது. உலகம் பூதாகரமாக விசுவரூபம் எடுத்து, பேய்க் கணமாக எக்காளமிட்டுச் சிரிக்கத் தொடங்கியது. கீழே சிதறிக் கிடந்த நூல் விரிந்தது. “...தன்னிடம் நம்பிக்கை அற்றவனே நாஸ்திகன், !' உணர்ச்சிகளை ஆளவல்ல சித்து கைவரப்பெற்றவர் சிற்றம்பலம். 'பாவம், ராணி !...” தர்மம் புன்னகை சிந்தத் தொடங்கிற்று.