பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

フ திருவாளர் சிற்றம்பலம் அவர்களுக்கு அன்று பிறந்த நாள் விழா, எழுபத்திரண்டாவது பிறந்த நாள் வைபவம் 1. மாலையில் விசேஷம் ! துயில் கலைந்து எழுந்ததுமே, சிற்றம்பலத்தின் மனம் மப்பும் மந்தாரமும் கலைந்து வெளி வாங்கிய வானமாக இரு ந் த து. உடற்பயிற்சி, குளியல், பிரார்த்தனை போன்ற நித்திய கடன்களையெல்லாம் வழக்கம்போலவே சுறுசுறுப்பாகவே செய்து முடித்துக்கொண்டு தம் அறைக்கு வந்து அமர்ந்தார். வழக்கம்போலவே அவருக்கு எல்லா வகையிலுே துணை நின்றாள் ராணி. - காலைச் சிற்றுண்டி வந்தது. அவர் அனுபவித்துச் சாப்பிட்டார். விக்கல் எடுத்தது. நீர் ೧r®ಕಹTi. குடித்தார். புதுச் சொக்காயை அணிந்துகொண்டார் அவர். புதிய ரோஜாப்பூவை நீட்டினாள் அவள். 'எனக்கு ஒரு மானசீகத் தூண்டுகோலாக இருந்தீர்கள். நீங்களும்