பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 போய்விட்டீர்கள், நேருஜி!” - பூவைச் செருகிக் கொண் டார். கீழே சிற்றம்பலத்தின் பெண்கள் வந்து இறங்கினார் கள். குரல்கள் அம்பலமாயின. மற்றவர்கள் இரவே வந்து சேர்ந்தார்கள். "ராணி, ராத்திரி நிம்மதியாகத் துரங்கினாயல்லவா?” என்று கேட்டார், பெரியவர். ஒl நளினமுடன் பதிலிறுத்தாள். அவள் மார் பகம் எம்பியது ; தணிந்தது. ஆரம்பம், முடிவு என்ற இவ்விரண்டையும் ஒன்றாய் மதித்துத் திரியும் தவப் பெண்போல நிர்மலமாக இருந்தது அவளது பால் வழி யும் அரவிந்த முகம். அவளை இமை பாவாமல் பார்த்தார் ; பார்த்தார்; அப்படிப் பார்த்தார். அவர் இமைகள் கசிந்தன. அவள் ஜரிகை அங்கவஸ்திரத்தை எ டு த் து க் கொடுத்தாள். எப்போதும் அவள்தான் அவரது கழுத்திலே போட்டு விடுவாள். இன்று அப்படிச் செய்யவில்லை. அவரும் அதைப்பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை. இளநகை வரிக்கோடிட்டது அவருடைய இதழ்க் கரையிலே. c சாப்பிடு!”