129 4 & まま * -- * * * "ராணி!"
- 庄 ...”
சி. ற் ற ம் ட ல ம் பெரிதாகக் கனைத்துக்கொண்டு, தொண்டையைப் பதனப்படுத்திவிட்டு பிறகு பாடினார். 'முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேவிருத்தி அகத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா கோலமிட்டுப் பாரேனோ !” - அழுகணிச் சித்தரின் ஆத்மலயம் பளிச்சிட்டிருக் குமோ ? பாடிவிட்டு அவர் சிரித்தார். கேட்டுவிட்டு அவள் சிரித்தாள். புத்தகத்தை வெறி பிடித்தவர்போல ஒரே எட்டில் வீசிவிட்டு, அவள் கைகளைப் பற்றத் துடித்து, பிறகு அதே நொடியில் பின் வாங்கிக்கொண்டு, ராணியைக் கூப்பிட்டு, அவளை நேருக்கு நேராக ஒரு கணம், இரண்டு கணம் என்று சில கணப்பொழுதுவரைப் பார்த்திருந்து முடித்து, பிறகு திரும்பவும் பேச ஆரம்பித்து, ராணி' என அழைத்து, "உனக்கு நான் முடிவு சொல்லவேண் டும் 1 இல்லையா ?' என்று வெள்ளைத்தனமான பான்மை யுடன் வினவிவிட்டு, அடுத்த நிமிஷம் அப்படியே மெளனச் சிலையாகி விட்டார் ! வி-9