இ பிறந்த நாள் விழா ஆரம்பமாயிற்று. பங்களா விழாக் கோலம் பூண்டது. பஞ்சுமெத்தை இடப்பட்ட நாற்காலியில் திருமிகு. சிற்றம்பலம் அவர்கள் வீற்றிருந்தார். மகாராஜாவுக்கு நேராக - வருவோர் போவோரின் வணக்கத்தைக் கவரு கிற ஜெயஸ்தம்பமாக புத்தாடைகள் அவருக்குப் புது மணம் ஊட்டின மலர் மாலையின் வாடை உள்வட்ட மாக நெடி ஏற்றியது. அந்தி மயங்கி வந்தது. பட்டணத்துப் பிரமுகர்கள் பலர் விழாவுக்கு வந்து சிறப்பித்தனர் வந்த பெரிய மனிதர்கள் அனைவரும் வயதில் சின்ன மனிதர்களாகவே இருந்து விட்டார்கள். ஆனபடியால், அவர் யாரிடமிருந்தும் ஆசி பெற பாக் கியம் செய்திருக்கவில்லை மாறாக, அவரது வாழ்த்துக் களைப் பலர் பெற்று ஏகினர். சிற்றம்பலத்தின் இதயத்தின் இதயம் சதா சாரதா சாரதா என்றே உச்சரித்துக் கொண்டிருந்தது. 'சாரதா, நீ இருந்த இடம் என் நெஞ்சில் உனக்காகவே என்றென்றும் காத்துக் கிடக்கும் ! இரு பாதிரிமார்கள் வந்தார்கள். ஒருவருக்கு இல்லறத்தில் இருக்க அனுமதி.
பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/137
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை