பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 சித்தாந்தத்தில் - நியதியில் பற்றுக் கொண்டு, அதன் பிடிப்பில் தம்மைத் தாமே நம்பி, அந் நம்பிக்கையையே காலத்திற்குக் கொடுத்த பதிலாக்கிவிட்டு, இப்போது அவரே ஓர் உதா ரணம் ஆகி, எனக்கு உத்தாரணம் அளித்தார். நான் கொடுத்து வைத்தவள். அதனால் அவரை நான் எடுத்துக் கொண்டேன் ! 'என் பெண் ைம க்கு ஒரு பொருள் கிடைத்துவிட்டது. எனக்குப் பூரணத்துவம் கிட்டிவிட்டது, அவருடன் இந்த ஒரு சில நாட்களாக நான் வாழ்ந்த - வாழ்ந்துவரும் சொர்க்கவாழ்வே என்வரை கோடானுகோடி யுகதர்மங்களாக என்னுள் நிரந்தரச் சத்திய மாகி நிழலாடும் மனிதாபிமானத்துக்கு ஒரு தர்மமும், நன்றிக் கடனுக்கு ஒரு கடிதமும் கிடைத்துவிட்டன, உலகத்துக்கு அந்த உலகத் தைப் பற்றி எனக்கு இனி அக்கறை ஏது ? "ஆம் எனக்கு வழங்கப்பட்டுள்ள காப் பும், ‘என்னை அணைத்து என்னுள் வளர்ந்து வரும் நிழலும் எனக்குப் பொருளாகி பொருள் ஆன அந்த மகத்தான சக்தியும்தான் எனக்கு விதி, வினை, தெய்வம், உலகம் எல்லாம் !. ஆமாம் !...... இதுவே ய தார் த் த ம | ன உண்மை !...” காற்று பாங்குடன் விசிற்று. பேனாவை மூடி விட்டாள் திருமதி சிற்றம்பலம், கண்களையும் இதயத்தையும் அவளால் அப்படி முடிவிட