பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 கருமணி மாலை செம்மை கண்டது. கங்காணி அக்கரைச் சீமையிலே கொண்டுவித்த அந்தக் காலத்தில், இங்கே கங்காணியின் செல்லப்பிள்ளைக்கு விளையாட்டுத் தோழி அமைந்த அந்த இனிய நன்னாட்கள் அப்போது அவளுக்குக் கண்ணாமூச்சி ஆடிக்காட்டினவோ?... மணல் வீடு க ட் டி ப் "புருசன் - பெண்டாட்டி, விளையாட்டு விளையாடிய நேரத்தில், அந்த விளையாட்டுக்கு யதார்த்த மானதோர் அங்கீகாரம் அளித்து, அந்த அங்கீகாரத்தைப் பிரகடனப்படுத்தும் முறையில் தன் கழுத்தில் மஞ்சள் முடிந்த சணல் கயிறு ஒன்றைத் தாலியாகக் கட்டித் தன்னை மனைவியாக ஆக்கிப் பெருமைப்பட்ட அந்தக் கனவுலக நற்பொழுது அவள் இதயத்தின் இதயத்தில் அப்போது உப்புக்கோடு மறித்து விளையாடியிருக்குமோ ?- விளையாட்டுக் காட்டியிருக்கலாமோ ? சாரைப்பாம்பென நீண்ட பெரு மூச்சு வெளிப்பாயத் தொடங்கியது. 'சின்ன எசமானரே!” அவள் மெய்ம்மறந்தாள் ! 'ஏலே, செல்லி ' என்று அலட்டினாள் மங்காத்தா; அதட்டுதலும் தொனித்தது. பயந்து விட்டாள் மங்காத்தா, ஈரல்குலை நடுங்கியது ; பத்து நாழிகை வெயிலில் வளர்ந்திருந்த வீரமணியன் காலடி நிழலைக் கூட அவள் பார்க்கப் பயப்பட்டாள். ஒடிக்கொண்டிருந்த பாம்பைப் பந்தயம் கட்டித் தாண்டிக் காட்டிக் கெலித்தவள்தான் அவளும் செல்லிக்குட்டி திடுக்கிட்டுக் கண் திறக்கிறாள் ! ...