பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 குளமங்கலத்து மாப்பிள்ளையிடமிருந்து கைமாற்றாக வாங்கி வந்த அரிசி முடிச்சு முடிச்சவிழ்ந்து அலங்கோல மாகவும் பரிதாபமாகவும் கிடக்கிறது ! கனவு காணாமலே விழிப்புப் பெற்றவள் போன்று, கண்களை மூடிமூடித் திறந்தாள் மங்கத்தா காலாடியில் கிடந்த அரிசி முடிச்சில் சருவச் சட்டியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த அரிசியையும் .ெ கா ட் டி முடி போட்டாள். 'மகளே ! இடம் தப்பிப் பொறந்திட்ட அதிசயப் பொண்ணு போலே நீ 1-ஆனதினாலே, இனி நீ ஒன்னோட மனசுப்படிக்கு நடந்துக்கிடு : ... ஆனா. நான்; ஒன்னைச் சுமந்து பெத்த ஆத்தா என்கிற சொந்தத்தை மட்டிலும் துண்டு முறிச்சுப் போட்டுப்புடாதேடி, ஆத்தாளே !' என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.