பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

プ

    • இந்தா, இன்னொரு அஞ்சு ருவா பொறுக்கிக்க இது ஒன் சமைஞ்ச பொண்ணுக்கு அச்சாரம் நாளைக்கு விடிவெள்ளி கிளம்பறத்துக்கு முந்தியே நீ உன் அருமை மகளைக் கூட்டிக்கிட்டு நிலக்கடலை பிடுங்கிப்போட எங்க கொல்லைக் குடிக்காட்டுக்குக் கட்டாயம் வந்தாக வேணும் ' என்ற ஆணையைப் பிறப்பித்தார் கங்காணி. கங்காணியா, இல்லை, கொக்கா ?

மங்கத்தா, பற்கள் தேசாந்தரம் போய்விட்டதால், ஈறுகளை வெஞ்சினம் தாளாமல் கடித்துக் கொண்டிருக் கிறாள். கவரிமானாகப் பாய்ந்து வந்தாள் செல்லி. ஆண்டே கும்பிட்றேனுங்க ' என்று சொல்விக் கும்பிடு கொடுத் தாள். நயமான-விநயமான பாவனைதான்! கங்காணிக்குப் பெருமை தாங்கவில்லை. முன்வரிசைத் தங்கப்பல்லில் அட்டகாசமான சிரிப்பு ஆடம்பரமாக விளையாடியது. "செல்லிக்குட்டி, அந்தாலே கிடக்குதே சல்லி அதைப் பொறுக்கிக்கிட்டு, விடிகாலம்பறவே எங் கடலைக் கொல்லைக் கூலி வேலைக்கு வந்திப்பிடு. உன் ஆத்தாக்காரிக்கு உண்டான அச்சாரத்தை நேத்திக்கே எம் மகன் கொடுத்திட்டான் ! கண்டிப்பாய் வந்திடனும் ; புரிஞ்சிருச்சா, புள்ளே ?' என்று கேட்டார். வெள்ளிப் பூணிகழி சுழல்கிறது. ફ્ર செல்லி நையாண்டிச் சிரிப்பை வெடித்தாள். "ஐயா, பெரிய எசமானரே ! ... வேலைக்கு வராட்டி என்னா