பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

菌覆 இறு இமைப்பிலே அதோ ... சிதறி ஓடிய ஒன்றிரண்டு குன்றிமணிகளின் கழலடி யிலே, அடிசாய்ந்த மரமாக மண்ணில் சாய்ந்துவிட்டாள் செல்லி நுங்கும் நுரையுமாக வாய் பொங்கியது. பீறிட்டுத் தெறித்த ரத்தத்துளி ஒன்று அந்தத் தாலி மஞ்சளுக்குப் பொட்டு இட்டது போலும் ? "ஐயோ, செல்லிக்குட்டி '... வீரமணி அலறிக் கதறினான் ! கோலமலர் விழிகள் இரண்டையும் அகலமாகத் திறந்தாள் வீரமணியின் செல்லி. விம்மல் வெடித்தது' "சின்ன எசமான்! நீங்க எப்பவுமே பெரியமனசு கொண்ட புள்ளிதான் ! அதே பெரிய மனசோடவே, ஒங்களை ஏய்க்கப்போற ஒங்க செல்விக்குட்டியைச் சமிச்சு மாப்புக் கொடுத்துப்பூடுங்க :- சின்ன எசமானரே !. நீங்க அடிக் கொருவாட்டி புகழ்ந்துக்கிட்டிருந்த அந்தப்புண்ணியவான் காந்தி இம்மாம் நேரத்துக்கு உசிரோடவே இருந்திருந் தாக்க, ஒருவேளை, நான் ஒங்களை மச்சானே ! . அப்படின்னு வாய் திறந்து, வாய்குளிரச் சொந்தம் கொண்டாடி விளிச்சு, உங்க மடியிலே தலைசாய்க்க எனக்கு லவிதம் கைகூடியிருக்குமோ, என்னமோ ? ஐயோ! . அந்தக் காந்தி செத்துச் சிவலோகம் பறிஞ் 3 سيستاتي