புயலோடு புயலான ஓர் ೨)ಹನಿ விளக்கு !... o அந்தப் பயங்கரச் சேதி, பயங்கரமான காட்டுத் தீயாகத் திக்கெட்டிலும் பரவி விட்ட து ... வடக்கே, அரசாங்கத் தொடக்கப் பள்ளிக் கூடம் தொடங்கி, தெற்கே நொண்டிப் பிள்ளையார் சிவனே' யென்று அரசாட்சி நடத்திக் கொண்டிருந்த அங்காளம்மன் கம்மாய்க்கரை அரசமரத்தடி முடியவும், மேற்கில் ஊராட்சியைச் சார்ந்த காந்தி திடலிலிருந்து, கிழக்கே கிராமக் கைத்தொழில் வாரியத்தோடு தொடர்பு கொண்ட கயிறு திரிக்கும் தொழிற்கூடம் வரையிலும் விரிந்து பரந்திருந்த குளமங்கலம் குடியிருப்புப் பூராவுமே திமிலோகப் படுகிறது ! ... வீரமணியைக் காணவில்லை ! வீரமணி, சுந்தரியின் வீரமணி எங்கே போய் விட்டான் ? ... சலனம் அடைந்து, களைதப்பிப் பரிதாபமாய்க் கிடந்த மச்சு வீட்டின் திட்டி வாசலில் ஆண் பிள்ளைகள், பெண்டு கள் மற்றும் நண்டு சுண்டுகள் அடங்கலான ஊர்ச்சனங் களின் மனிதத்தனம் ஓங்கிய நெரிசல் இப்போது மிஞ்சத் தலைப்படுகிறது. .
பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை