பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 காய்ச்சலின் உறுதியான உபாதைகளைக் கண்டிக்கக் கூடிய அசகாய செந்தூரத்தில் ந - ன் கு வேளைக்குப் பொட்டணங்களை மடித்துக் கொடுத்தார் அம்பலம். "வீரமணி, மருந்தைவாயிலே கொட்டிக்கினு இங்கேயே சுடுதண்ணி வாங்கிக்குடிச்சுக்கிடனும், கேணித் தண்ணி வசப்படாதாக்கும் !" என்று எச்சரிக்கை செய்தார். வீரமணி ஆத்திரம் துTள் பறக்க வைத்தியரை முறைத்துப் பார்த்தான். மச்சானின் முன்கோபம் சுந்தரிக்கு அத்துபடி வைத்தியரை அண்டித் தனது பண்ண வீட்டுக்கு அனுப்ப எத்தனம் செய்தாள். அவள் கெட்டி குடியிருப்பில் வேறு ஒருத்திக்கு வருமா ?- ஊகூம் ! கருப்பி சோளக்கொட்டைகளை உரலில் இட்டு விசுக்' விசுக்கென்று உலக்கையை லாவகமாய்க் கைக்குக் கை மாறியவாறு ஊஸ்.ஊஸ் என்று மூச்சுக்காட்டிக் குத்திக் கொண்டிருந்த சத்தம், இப்போதுதான் சத்தம் கேட்கா மல் கேட்கிறது !