பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தாங்கிக்கிட ஏலாத இந்த நல்ல நேரத்திலே மேற்கொண்டு என்னாலே ஏதும் பேச முடியல்லிங்க ஆனாலும், முதலும் முடிவுமாகத் திரிகரண சுத்தியோட இப்பச் சொல்றது தான் எனக்கு மட்டுமில்லே, ஒங்களுக்கும் விதியாக ஆகிப் புடட்டும், ஆகிப்புடவும்வேனும் - என்னைத் தொட்ட முதல் ஆம்பளையான நீங்க எம்மனசையும் தொட்டுப் புட்டீங்க நீங்க எனக்குத் தரப்போற தாலிபாக்கியம் ஒங்களுக்குத் தீர்க்காயுசைக் கொடுக்குமுங்க அந்தக் கொடுப்பினையோட மகத்துவத்தினாலேதான் நான் தீர்க்க சுமங்கலியாக ஆகவும் வேணுமுங்க ' எல்லாவற்றையும் பையப்பையச் சொல்லிமுடித்த சுந்திரியின் விழிநீரை உரிமையோட துடைத்தான் வீரமணி ஆளப்பிறந்த தேய்வமாகி நின்ற வீரமணியின் கண்ணிரை உறவோடு விலக்கினவள் சுந்தரி, பதைபதைப்புடன் இருவரும் ஜோடியாகப் பாதங் களைப் பிரித்தனர். - அந்நேரத்தில் ; அன்னக்கிளி தலைதெறிக்க ஓடிவந்தாள். "ஆத்தாளுக்கு ஒண்னும் ஆயிடல்லையே, ஆச்சி மகளே ? சஞ்சலத்தின் உச்சத்தொனியில் பதட்டத்துடன் விசாரித்தாள் சுந்தரி. 'அப்பத்தாளுக்கு நிலமை எசகு|பிசகாத்தான் இருக்கு: ராத்திரி தாங்குறதுகூட ஈரெட்டுத்தானாம் வைத்தியர் சொல்லிட்டார். கண்ணு ரெண்டையும் உருட்டி உருட்டி முழிச்சு உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கோனும் !... சீனித்தண்ணியைக்கூட முழுங்கக்காணோம் ... ஒடியாங்க அக்காளே ! w