பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமதி சிற்றம்பலம் இடை நேரத் தாக்கத்தை முடித்துக்கொண்ட கையுடன், கைக்கடிக்காரத்தைப் பாதத்தார் திருவாளர் சிற்றம்பலம். - மணி மூன்று - பிற்பகல். கோடை வெயிலின் வெம்மை குறைந்ததாகத் தோன்றவில்லை, அன்றையச் சீதோஷ்ண நிலையின் கதி அப்படி இருக்கக்கூடும். மெத்தையைச் சுற்றி வைத்துவிட்டு, மண் கூஜாவைக் கவிந்து நீர் எடுத்து முகத்தைக் கழுவித் துடைத்தார். டவல் உதவியது. கைகால்களை முறை பிசகாமல் நீட்டி நெளித்து முடித்தவுடன், நிலைக் கண்ணாடியின் முன்னே போய் நின்றார் அவர். வகிடு ஒய்யாரமாக அமைந்தது. முன்புறப்பகுதியிலே, அங்கொன்றும் இங் கொன்றுமாக நரை முடிகள் சில பல்லை இளித்து அம்பலப்படுத்தின. அக்காட்சியைப் பார்த்தவுடன், அவர் மனம் வெதும்பினார். நெடுமூச்செறிந்தார். மறு கணம், அவர் மனக்குறையை விரட்டினார். கண்ணாடி யில் தெரிந்த தம்முடைய அழகிய உடலின் வலுவும் கைகளிலே தென்பட்ட தசைக் கரணைகளும் அவருக்குப் புதுத் தெளிவை அளித்திருக்க வேண்டும். அதன் விளை பலனாக, சோர்வு அழிந்திருக்க வேண்டும்! முறுக்கு மீசை கறுத்துத் தழைத்துப் பொழிந்தது !...