பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா - 47 பெண்கள் நினைத்தால் முடியாததா ? ஆண்களின் பொழுதுபோக்கிற்காகவும் மன மகிழ்ச்சிக்காகவும் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ஆட்டமே கூடைப் பந்தாட்டமாகும். அதைப் பார்த்த பெண்களும், தாங்களும் ஆடவேண்டும் என்று விரும்பி, ஆடத் தலைப்பட்டார்கள். குறிபார்த்து எறிவதில் க2ளப்பில்லாமல் ஆடுவதில் ஆண்களுக்குப் பெண்கள் ச2ளத்தவர்கள் அல்ல என்பதையும் அவ்வப்போது நிரூபித்து வருகின்ருர்கள். குமாரி மேரி பாய்டு எனும் அமெரிக்கப் பள்ளிக் கூட மாணவி கூடைப் பந்தாட்டப் போட்டி ஒன்றில் விளையாடும்போது, அவள் ஆற்றிய சாதனையானது, ஒரே ஆட்டத்தில் 156 வெற்றி எண்கள் (Points) எடுத்ததுதான். அந்த வெற்றி எண்களில் 77 முறை வி2ளயாடும்போது வளையத்திற்குள் எறிந்து வெற்றி பெற்றது. மீதி இரண்டு வெற்றி எண்களும் தனி எறி (Free Throw) எறியும்போது பெற்ற வெற்றி எண்கள். (விளையாடும்போது வளையத்திற்குள் விழுமாறு எறிக் தால்2 வெற்றி எண்கள். தனி எறிக்கு 1 வெற்றி எண்.) கண்2ணக் கட்டிக்கொண்டு, ஒற்றைக் காலில் கின்று 92 முறை எறிந்த வில்பரட் ஹெட்சல் என்பவரைப் பற்றி பின்னர் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்! ஆகவே, பெண்கள் நினைத்தால் எந்த காரியத் திலும் சாதிக்க முடியும் என்பதுதான் வரலாறு. புராண காவியங்கள் கூட பெண்களின் பெருமையை