பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விளையாட்டு அமுதம் சதுரங்க ஆட்டத்தில் ராணி எப்படி வந்தாள்? சதுரங்க ஆட்டத்தில், ராணியே சகல சக்தி வாய்ந்த காயாக இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனல் ஆட்டத்தின் ஆரம்ப காலத்தில் ராஜாவுக்கு அடுத்த சக்திவாய்ந்ததாக முதல்மந்திரியே இருந்ததாக வரலாறு கூறுகிறது. பிறகு, முதன் மந்திரியை ஒதுக்கி மறைத்துவிட்டு, ராணி எப்படி முன்னே வந்தாள் என்பதுதான் நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. கி.பி. 12ஆம் நூற்ருண்டு வரை, சதுரங்க ஆட்டத் தில் முதல் மந்திரியே பிரதான ஆட்டக் காயாக உருவாக்கப்பட்டிருந்தது.ஏனென்ருல் காரணம்.உண்டு. அரசர் போருக்குப் போகும் பொழுது அவருடன் போய். அரசரைக் காக்கவும், போரை வெற்றிகரமாக கடத்தவும் முதன் மந்திரியே போவது போர் மரபு. இந்தியாவில் மட்டுமல்ல. அரேபியா இன்னும் பல தேசங்களிலும் இந்த மரபே வெகுவாகப் போற்றி, ஏற்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்தது. ஆனல் இங்கிலாந்தில் இந்த மரபு மண்ணுகிப் போகும்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. 1485ஆம் ஆண்டு, வட இத்தாலியில் நடந்த திருமணத்திற்குப் பிறகே இந்தச் சூழ்நிலை தோற்றம் எடுத்தது. இத்தாலியை ஆண்ட ஒரு இளவரசனுக்கு கேதரின சபோர்சா எனும் அரசகுல மங்கை மாலையிட்டு மனளகை ஏற்றுக்கொண்டாள். மாலையிட்ட மன்னன் மனுளகை இருந்தானே தவிர, காட்டைக் காக்கும்.