பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



33

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


12. கிரிக்கெட்டில் ஆறு ஓட்டங்கள் ஏன் வந்தது ?

கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய இடம் வகிப்பது விக்கெட்டுகள்தான். 22 கெஜ தூரத்திற்குள்ளாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இரண்டு விக்கெட்டுகளைக் குறிபார்த்து, பந்தெறிந்து ஆடுபவர்கள் முயற்சிப்பார்கள். அப்படிஎறியப்படும் பந்தை அடித்தாடுபவர்கள், தூரத்திற்குப் போவதுபோல அடித்தாடி, அதற்கிடையில், இரண்டு விக்கெட்டுகளுக்கிடையே இருவரும் மாறிமாறி ஓடிஎடுக்கும் நிலையைத்தான் 'ஓட்டம் '(Run) என்று குறிப்பிடுவார்கள்.

ஒரு விக்கெட்டிலிருந்து 75 கெஜத்திற்கு அப்பால் எல்லைக் குறிக்கப்பட்டிருக்கும்; அவ்வாறு சுற்றிலும் எல்லையாகக் குறிக்கப்படும் மைதானம், பொதுவாக முட்டை வடிவ அமைப்பில் (Oval) அமைந்திருக்கும்.

பந்தடித்தாடும் அட்டக்காரர் ஒருவர், பந்தய மைதான எல்லைக்கு வெளியே பந்தை அடித்துப் போகவிட்டால், அவருக்கு 4 ஓட்டங்கள் (Four) என்று அறிவிக்கப்படும். அவருக்குரிய குறிப்பேட்டில் ஓட்டங்களின் மொத்தம் என்றும் குறிக்கப்படும்.

பந்தய மைதானத்தின் எல்லைக் கோட்டுக்கு வெளியே போய் பந்து விழுமாறு அடித்துப் பந்தை அனுப்பினால் அதற்கு எத்தனை ஓட்டங்கள் தரவேண்டும்? இந்த பிரச்னை, ஆட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து 1904-ம் ஆண்டுவரை எழவே இல்லை.

1904ம் ஆண்டு செஸ்டர் பீல்டு எனும் இடத்தில், டெர்பிஷயர் குழுவுக்கும் செசக்ஸ் குழுவுக்கும் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்தது. செசக்ஸ் குழுவைச் சேர்ந்த P.A.