பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13


வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டான். அவன் அழகை சிலை வடித்தார்கள். பொன்னையும் பொருளையும் பரிசாகஅளித்தார்கள் அந்த நாட்டினர்.

எல்லோரும் சென்று வருகின்ற கோட்டை வாயி லில் அவனே சென்று வரவிடாது, கோட்டைச் சுவரை இடித்து அவனுக்கு எனத் தனிவழி அமைத்துஆரவாரத் துடன் வரவேற்றனர். வாழ்த்தினர். வணங்கினர் என்றுவரலாறு புகழ் பாடுகின்றது.

புனித ஒலிம்பியா மலையில் வளர்ந்த ஆலிவ் மரத்தின் மலர் கொடிகள் வளையங்களாக,வெற்றிவீரன் தலையிலே அணியப் பெறும் பொழுது, அவன் பிறந்ததன் பெரும் பயனே அடைகின்ருன் என்ற அளவில்,ஆரவாரத்துடன், அளவிலா ஆனந்தத்துடன் பழைய ஒலிம்பிக் பந்தயங் களே கிரேக்கர்கள் நடத்தினர்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கிரேக்கர்கள் நடத்திய ஒலிம்பிக் பந்தயங்கள் கீர்த்தியின் உச்ச நிலையை அடைந்திருந்தன, வரலாற்ருசிரியர்கள் ஆராய்ச்சி குறிப்புக்கும் எட்டாத காலத்திலேயே, அவர்கள் வாழ்க்கை முறையில் செம்மாந்த நிலையில், செழிப்பார்ந்த நாகரிகக் கலைகளில் நாளெலாம் நடமாடித் திளைத்திருந்தனர்.

வ ர லா ற் ரு சி ரி ய ர் க ள் கு றி ப் பு க் க ள் எது சரியான வருடமென்று ஒன்றுக்கொன்று வழக்காடிக் கொண்டிருக்கின்றன என்ருலும், ஒரு ஆண்டினை மட்டும் சரியான தென்று எல்லோரும் ஏற்றுக் கொண் டிருக்கின்றனர். அதற்கு முன்னரே வழைய ஒலிம்பிக் பந்தயங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக் ன்ெறன. என்ருலும், வரலாற்றுக் குறிப்புக்கு வடிவம்