பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. இரண்டு கெட்டான் திமஸ் (Euthரmus)



ஒருவன் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற்று புகழடைந்து விட்டான் என்ருல், அவனே இந்திரன் சந்திரன்’ என்று நம்மவர்கள் போல புகழந்து பேசி, 'ஒகோ என்று வானளாவ உயர்த்தி, கதை கட்டி விடுகின்ற பழக்கம், கிரேக்கத்தில் நம்மைவிட சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.

அந்த வீரன் எப்படிப்பட்டவன் என்பதைக் கூட அவர்கள் எண்ணிப் பார்ப்பது மில்லை. அந்த இரண்டுங்கெட்டான் நிலைக்கு உள்ளாகியிருந்த ஈதிம சுக்கும் அதே போல புகழும், புராணம் தோற்பது போன்ற பின்னணியில் உள்ள கதையும் உருவாயின.

தியாஜனிசிடம் தோற்ற ஈதிமஸ், பணத்தைக் காட்டி, அவனைப் பக்குவப்படுத்தி, தான் வெற்றி பெற சமரசம் செய்துகொண்ட சுத்த சுகுணவீரன் என்பதும், பின்னர் அடுத்து வந்த ஒலிம்பிக் பந்த யத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற மகாவீரன் என்பதையும் நீங்கள் தியாஜனிஸ் கதையில் படித்தீர்கள்.