பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45



அந்த அழகி சாகப்போகிருள் என்பதை அறி யாமல், அவள் அழகிலே தன் மனதைப் பறிகொடுத் தான் ஈதிமஸ், காலங் கடந்து போன நிலை என்று தெரிந்து கொண்ட பின்னும் எண்ணத்தை விட்டு விடவும் அவனுக்கு மனமில்லை.

தான் விரும்பிய பெண்ணுக்காகப் பேயுடன் போரிடவும் தயார் ஆனன். பேயைத் தோற் கடித்து, வென்று தொலைத்த துமின்றி பெண்ணையும் மணந்து கொண்டான். அந்தத் தெ மிசா நகரத்து மக்களுக்கு நிரந்தர விடுதலையையும் அச்சத்தி லிருந்து வாங்கித் தந்தான் என்பது ஒரு கதை.

இந்த ஈதிமசும் ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தன்னை ஒரு மனிதப் பிறவி என்று கூருமல், தெய்வப் பிறவி என்று பேசினன். நதிக்கடவுளான காசினஸ் (Caecinus) தான் தனது தந்தை என்று கூறியதை பலரும் ஏற்றுக் கொள்ளத் தான் செய்தனர்.

பேயைக் கொன்ற கதையும் இவன் வாழ்க்கை வரலாற்றுடன் சேர்ந்து கொண்டது. மனிதனுக Ιbl-LDΠr Lφ., ஆவியுடன் போராடி வாழ்ந்த ஈதிமஸ், நிலையில் இரண்டுங்கெட்டானக இருந்தாலும், சரித் திரத்தில் வீரனுக்குரிய புகழ் நிலையிலிருந்து விழாமல் இன்று வரை வாழ்ந்து வருகிருன்!

-