பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

தான். போட்டியில் பரிசிழந்த கலக்கநிலை. முகத்திலே பட்ட குத்துக்களினால் ஏற்பட்ட மயக்கநிலை.

தன்னை மறந்த நிலையில் வந்துகொண்டிருந்த கிளியோமிடஸ் வழியிலே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதனருகில் ஆடி அசைந்து சென்றான். அசந்து போய் நின்றான்.

என்ன செய்கிருேம் என்று தெரியாத நிலையில் அவன் அந்த பள்ளிக்கூடக் கூரையைப் பிடித்து இழுக்க, கூரை இடிந்து விழுந்தது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கெ ண்டிருந்த 60 குழந்தைகளும் உள்ளேயே நசுங்கி இறந்து போகின்றனர். கிளியோமிடிஸ் திகைத்துப் போய் நிற்கிறான்.

செய்தியறிந்த அந்த ஊர்மக்கள், அவனை பிடித்துத் தாக்கிட விரட்டிக்கொண்டு ஓடி வரு கின்றனர். பயந்து போன கிளியோமிடிஸ், முடிந்த வரை ஒடி இனி ஒட முடியாது என்ற நிலையில், அதின் (Athene) எனும் கோயிலுக்குள் ஒடி நுழைந்து கொள்கிறான்.

அடைக்கலம் என்று கோயிலுக்குள் புகுந்தவன், மறைவாகப் பதுங்கிக் கொள்ள இடம் பார்க்கிறான். இடம் அமையவில்லை. அவனுக்கு ஒரு பெரிய கனமான பெட்டி ஒன்று இருப்பதைப் பார்க்கிறான்.

அதுவே அவனுக்கு, அந்த நேரத்தில் பாதுகாப் பான இடமாகத் தெரிகிறது.

பெட்டியைத் திறந்து அதனுள் புகுந்து மூடிக் கொள்கிறான்,