பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12. பிறந்தமேனியும் பெருமையும்

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்ற போட்டியாளர்கள், பிறந்த மேனியுடனே பங்கு பெற்ருர்கள். அதற்கும் ஒரு சில காரணங்களைக் காட்டுகின் ருர்கள் வரலாற்ருசிரியர்கள்.

கி. மு. 720ம் ஆண்டு, மெகாரா எனும் இடத்தைச் சேர்ந்த ஒருவீரன். அவன்பெயர் ஒரிசிப்பஸ். அவன் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டான். ஒட்டத்தில் ஒடிக்கொண்டிருக்கும் பொழுது பாதிவழியில், அவன் அணிந்திருந்த கால்சட்டை கழன்று விழுந்து விடுகிறது. என்ருலும் அவன் வெற்றி பெற்று விடுகிருன். ஆகவே ஒன்றுமில்லாமல் ஒடுகின்ற முறையே பின்பற்றப் பட்டது என்கிரு.ர்கள் வரலாற்ருசிரியர்கள்.

ஏதென்ஸ் நகரத்தார் புதுமை செய்ய வேண்டும் என்று விழைந்தார்களாம். ஒடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ஒட்டக் காரர் கால்சட்டை நழுவி விழுந்து, தடுமாறி அவரும் கீழே விழுந்துவிட ஏதுவாக இருப்பதால், எப்பொழுதும் பிறந்த மேனியுடனேயே ஒட வேண்டும் என்ற விதியை அமைத்து விட்டார் களாம்.

கிரேக்க நாட்டவர்கள், உடலை மிகவும் செம்மை யுடனும் சிறப்புடனும், கட்டுடலாகவும் வைத்துக் கொண்டிருந்ததால், பிறர்பார்த்து மகிழவும், அவர்கள்