பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



3.

விளையாடும் இன்பம்


நாடக வாழ்க்கை நாடகமே உலகம், நாளை கடப்பதை யாரறிவார்? என்ற நாடோடிப் பாடலை நாம் கேட்டிருக்கிருேம், சில சமயங்களில் வாய் விட்டுக்கூட பாடி இருக்கிருேம்.

நமது வாழ்க்கையில் ஏற்படும் திடீர்த் திருப்பங் களையும், தாக்குதல்களையும், அ வைகளினல் உண்டாகும் தடுமாற்றங்களையும் குறித்துக்காட்ட, கையாண்டித்தனத்துடன் பாடிக் காட்டிச் சென்நறிருக்கிருர்கள் நமது முன்னேர்கள்.

நாடகம் போல்தான் வாழ்க்கை, நாளைக்கு நடக்சு இருப்பது என்ன என்று நாமறியாமல் போவதால், இன்றே ஒழுங்காக வாழ்ந்து விடு. உயர்வான இலட்சி யத்துடன் வாழ்ந்துவிடு. இன்பமான இனிய வாழ்க் கையை வாழ்ந்து விடு' என்று நகைச்சுவை நிறைந்த நயமான எச்சரிக்கைதான் மேலே காணும் இரண்டுஅடிகளும்.