பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 23

வெளியே நிற்பதன் இரகசியம் சுந்தரத்துக்குப் புலப்படவே இல்லை. அதை அறிந்து கொள்ள அவன் உள்ளம் துடித்தது. ஆர்வப் பெருக்கோடு அவன் முருகை நோக்கி வினா தொடுத்தான்.

'நீ சொல்வது ரொம்ப சரி. அறிவானந்தம் எல்லாத்திலேயும் முதல் மாணவன்தான். ஆனால், அடிக்கடி வகுப்பறைக்கு வெளியே நிற்கிறானே அது ஏன்?'

சரியான காரணத்தை அறிய வினா தொடுத் தான் சுந்தரம்.

'அவனும் நம்மைப் போல் சரியான நேரத்தில் பள்ளிக்கு வரத்தான் விரும்புறான். அதுக்காக எவ்வளவோ முயற்சியும் செய்யறான். ஆனாலும் அவனாலே நேரத்துக்குப் பள்ளிக்கு வர முடியறதில்லை. புதிராகவே பதிலளித்தான் முருகு.

இந்தப் பதில் மற்றவர்கட்கு மேலும் ஆர் வத்தைத் தூண்டியது. சரியான காரணத்தைத் தெரிந்து கொள்ளத் துடித்தார்கள். அதை அறிந்து கொள்ளும் ஆவலில் சுந்தரம் மேலும் வினா கொடுக்கலானான்.