பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168. - விவாகமானவர்களுக்கு - ளாறுகளில் சில, கர்ப்பப்பை நோய்களில் சில சில சோகை வகைகள் போன்ற நோய்கள் கண்டால் உடனே டாக்டர் கர்ப்பத்தைச் சிதைக்க வேண்டியது கடமையாகும். அப். படிச் செய்யாவிட்டால் தாய்க்கு ஆபத்தாய் முடிந்துவிடும். ஆயினும் டாக்டர்கள் சட்டத்தைக் கண்டு பயந்து ஆபத்தான சமயத்திலுங்கூடக் கர்ப்பச் சிதைவு செய்யத் தயங்குகிரு.ர்கள். அதனல் என்ன நேரிடுகின்றது? பெண்கள் தாங்களாகவே சிதைக்க முயல்கிருர்கள். நம்முடைய நாட்டில் பப்பாளிக் காயும் எள்ளும் அன். சிைப் பழமும் கர்ப்பத்தைச் சிதைக்கக் கூடியவை என்ற எண்ணம் இருந்து வருகிறது. அவற்றைப் பெண்கள் உபயோ கிக்கவும் செய்கிருர்கள். அவை எவ்வளவு தூரம் பலன் தருமோ தெரியாது. ஆனல் அவை சர்வ சாதாரணமான ஆகாரங்கள். அவைகள் மிக நல்ல ஆகாரங்களுங்கூட. பப்பாளிக் காய் முதல் தரமான சீரணகாரி என்று மேனுட்டு வைத்தியர்களும் சொல்லுகிருர்கள். எள்ளோ தாதுபுஷ்டி அளிப்பதில் இணையற்றது என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. தினந்தோறும் அதிகாலையில் ஒரு பிடிஎள்மென்று தின்ருல் யானை பலம் வரும்; நூறு வயதானலும் பல் விழாது என்று சமஸ்கிருத நூல்கள் சொல்லுகின்றன. அன்னசிப் பழம் நல்ல ஜீவசத்துடையது; குடலிலுள்ள கிருமிகளைப் போக்க வல்லது. இந்த மூன்றும் சாப்பிட மிகச் சுவை யுள்ள வையுமாகும். கர்ப்பம் சிதையுமோ சிதையாதோ எல் லோரும் சாப்பிடலாம். உடம்புக்கு நல்லதேயன்றித் தீமையில்லை. - ஆனல் பெண்கள் கருவை வெளியாக்குவதற்காக வேறு. மருந்துகள் யார் சொல்லையும் நம்பிச் சாப்பிட ஆரம்பிப்பது பெரிய தவருகும். ஒரு வேளை அந்த மருந்துகள் கர்ப்பத் தைச் சிதைத்தாலும், அதைச் சிதைப்பதோடு அவர் களுடைய ஆரோக்கியத்தையும் பலத்தையும் சிதைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. s அநேக பெண்கள் தாங்களாக எதுவும் செய்து கொள்ளாமல் 'கர்ப்பம் சிதைக்கும் பண்டிதர்"களிடம் சரண் புகுகிருர்கள். அந்த பிரகஸ்பதிகளுக்கு உடல் நூல் விஷயம் எதுவும் _ தெரியாது. பிறர் கற்றுக் கொடுத்த முரட்டு வழிகளே தெரியும். அவர்களில் சிலர் கொடிய விஷ ம்ருந்துக்ளைக் கொடுப்ப்ார்கள். அவை அதிகப்பட்டாலும்