பக்கம்:விஷக்கோப்பை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

99


சி.பி. சிற்றரசு 99 ஞானமடைந்த ஒவ்வொருவனும் மரணத்தை ஆவலுடன் விரும்புவான் என்று நீர் சொன்னது இதற்கு நேர்மாருக இல்லையா? நாம் ஆண்டவ னுடைய சொத்தாயிருந்து, அவர் பாதுகாப்பிலிருந்து காக்கப் பெறுவது உண்மையாயின் எப்படி அந்த ஞானியானவன் அந்தக் காப்பிலிருந்து விடுபடுவான். ஏன் உயிர்விட ஆவல் கொள்ள வேண்டும் என்று ஒருவர் கேட்டார். சாக்ர : ஓகோ ! என்மேல் குற்றம் மறுபடியும் சுமத்துகிறீர்கள். ஏன் உயிரைவிடப் போகிறீர் ?. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஏன் நீர் முயலவில்லே என்று என்னைக் கேட்பதற்குப்பதில் இந்தக் கேள்வி. யைக் கேட்கின்றீர்களல்லவா ? . நண்பர்கள் : ஆம் என்றனர். சாக்ர : கடவுள் காப்பில் நான் இருந்து வந்தேன். அவர் கட்டளையிட்டவுடன் மகிழ்ச்சியாக உயிரை விடுகிறேன். ஆகையால், மரணத்தைக் கண்டு துயரப்படக்கூடாது. இந்த நேரத்தில் கிரீடோ எதையோ சொல்ல வாயெடுத்தான். சாக்ர : என்ன கிரீடோ. எதையோ சொல்ல வாயெடுத்திரே, என்ன அது ? - * கிரிடோ : ஒன்றுமில்லை சாக்ரடீஸ். உமக்கு விஷம் கொடுக்க வேண்டிய அதிகாரி சொல்கிருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/104&oldid=1331487" இலிருந்து மீள்விக்கப்பட்டது