6
விஷக்கோப்பை
6. விஷக்கோப்பை r
இந்த நாட்கம் நடைபெற்றதைப் . பார்த்து, ஆசிரிய னுடைய அறியாமைக்கிரங்கி புன்சிரிப்போடு, திரும் பிய கலைக்களஞ்சியம் சாக்ரடீஸ். X ஆணவ வெறியால் பலரைப் பழிவாங்க அதிகார வர்க்கம் சிறியபோதெல்லாம் எச்சரித்து, அது நல்வழி நடக்கத் தன் சுடரொளி காட்டிய கலங்கரை விளக் கம். நீதியை நேர்வழி நடக்க ஒட்டாமல் தடுத்த பல சண்டாளர்களைத் தன் விவிைடையால் திடுக்கிடச் செய்த தன்னுண்ர்வாளன். - தனது சிந்தையைப் புலன்களில் புகவிடாது எளி தில் தன்வயப்படுத்திக்கொண்ட விவேகி. வாழ்விழந்த பலருக்கு வாழ்வின் பிறப்பிடத்தைக் காட்டிய பெரியோன், நமது மதிப்புக்குரிய தத்துவஞானி சாக்ரடிஸ். - ஏதன்ஸ் நகரவாசிகளைப்பற்றி மெகாலே பின் வருமாறு கூறுகிருன் ஏதன்ஸ் நகர மக்கள் பிற நாட்டு மக்களைக் காட்டிலும் பன்மடங்கு அறிவிற் சிறந்தவர்கள். ஒவ்வொருவனும் நீதியறிந்தவனும், போர் வீரனும், நீதிபதியுமாவான். மிகவும் எளிய நகரவாசிக்கும் பிழைக்க வழியையும், கவலையற்று ஒய்ந்திருப்பதற்கு வசதியையும், நாட்டை நடத்திச் செல்லும் நல்லதோர் அறிவையும், இன்பமாய்ப் பொழுதுபோக்கும். சாதனங்களையும் அந்த நாட்டுக் குடியரசு தந்தது.' அப்பேர்ப்பட்ட நாட்டில் பிறந்த சாக்ரடிஸ் எவ் வளவோ பயங்கரப் போர்களும், அதனால் மாற்றி