106
விஷக்கோப்பை
106, விஷக்கோப்பை
நன்மையின் மூலம் துடைத்தனர். நகரத்திற்கு அவர்கள் சொந்த வாழ்க்கையில் செய்திருந்த தவறு களைவிடப் படைவீரர்களாக மிகுந்த பணியாற்றி யுள்ளனர். அங்கே எந்நெஞ்சங்களும் மங்கலடைய வில்லை. ஏனெனில், அவர்கள் தற்புகழ்ச்சியைவிட செல்வத்தை மிகுதியாக விரும்பினர். எங்கும் ஏழையின் செல்வக்கனவில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. இவை எல்லாவற்றையும் நகரத்தின் பொருட்டு போர் புரிவதற்காக, புறத்தே ஒதுக்கி வைத்தனர். நகரன்னையின் புகழுக்காகப் பழி வாங்கத் திரியும் செயலை ஒர் உயர்ந்த புகழ் வா ய் ந் த ச் செயலாக எண்ணிக் கொண்டனர். நம்பி உறுதி காண முடியாத நம்பிக்கை தெய்வமும் அவர்களை விருப்பம்போல் அனுப்பியதும், அவர்கள் தங்கள் எதிரிகள் நெருங்கிய உடன் தங்கள் ஆண்மை வலிமை யுடன் எதிர்த்தனர். பின்னர் போரின் அதிர்ச்சி வந்தபோது மிகக் கூடுதலாகத் துயர்படுவதையே, பலவீனத்தின் மூலம் உ யி ர் பிழைப்பதைவிட விரும்பித் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அவர்களைப் பற்றிய நினைவு மனிதர் உதடுகளில் தோன்றும் இழி உரைகளைத் தப்பிவிட்டது. ஆனல் அவர் க ள் அதற்குப் பதிலாகத் தங்கள் உடல்களில், மனிதக் கரங்கள் அளித்த அடையாளப் பொறிகளைத் தாங்கிய துடன், ஒரு கணநேரத்தில் தங்கள் வாழ்வின் மேலுச்சக் கட்டத்திலே, அவர்களுடைய இறக்கும் கண்கள் அச்சத்தாலன்றி புகழினல் நிறைக்கப்பட் டிருந்தமையால் இவ்வுலகை விட்டு எடுத்தேகப் LIL_l_.ôôT [T.