பக்கம்:விஷக்கோப்பை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

109


சி. பி. சிற்றரசு 109 எனக்குத் தெரியும். உங்களுக்கு ஆறுதல் கூறு வது எளிதன்று என்பது. மற்றவர்கள் மகிழ்ச்சி யுறும்போது, அடிக்கடி உங்களுக்கும் அது முன்பு அவ் வாறு சொந்தமாயிருந்ததைப்பற்றிய நினைவுகள் தோன்றுமென்பதுடன், மேலும் மனிதர்கள் தாங்கள் என்றுமே சுவைத்தறியாத ஒன்றை இழப்பதற்கு வருந்துவதில்லை. ஆனால் தங்களுக்கு விருப்பாகிப் போயிருந்த ஒன்று தங்களிடமிருந்து பறிக்கப்படும் போது துயரடைகிருர்கள் என்பதையும் நானறிவேன். இப்போது நீங்கள் மற்ற மக்களின் நம்பிக்கையுட னும், துணிவான நெஞ்சத்துடனும் இருக்க வேண்டும். இப்போது வயது வந்தவர்கள் அதைச் சாதிப்பார்கள். உங்கள் வட்டாரத்திலுள்ள இடைவெளியை நீங்கள் மறப்பதற்கு உதவுவதுடன், நகரத்திற்கும், அதன் தொழிலாளர்கள் வீரர் அணிகளிலும் உதவுவார்கள். எம் மனிதனும் மற்றவர்களைப் போலவே நகரத்தின் பேரிடரான வேளையில், தன் குடும்பமும் இடரான தருணத்தில் இருந்தாலொழிய, ஒரு நியாயமான அறிவுரையை வழங்கிவிட முடியாது. வீரியத்தின் வயதைக் கடந்துள்ளோர்க்கு நான் கூறுவது:'நீண்ட ஆண்டுகளிலிருந்த மகிழ்ச்சியை அவ்வளவு ஆதாயமாக, இன்னும் இருக்கக்கூடிய குறுகிய கால வழிக்கு முன்பாக நிறுத்திக்கொண்டு, உங்கள் பளுவை இறந்தவனின் புகழால் குறைத்துக் கொள் ளுங்கள் ஏனென்ருல் புகழால் ஏற்படும் காதல் மட்டுமே காலத்தால் பழமை பட்டுப் போவதில்லை. இப்புகழே சிலர் கூறுவதுபோல் பொன் அன்று. தடுக்க முடியாத வாழ்விறுதியின்போது போற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/114&oldid=1331497" இலிருந்து மீள்விக்கப்பட்டது