பக்கம்:விஷக்கோப்பை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

விஷக்கோப்பை


பாராட்டப்படுகிறது” என்று கல்லறைகளைச் சுற்றி நின்ற, இறந்துபட்டோரின், அதிலும் சிறப்பாகப் போரில் வீரமரணம் எய்தியோரின் பெற்ருேர்களுக் கும் சுற்றத்தாருக்கும் நகரத்தாருக்கும் ஆறுதல் கூறி ன்ை. (எல்லோரும் அமைதியாகச் சென்றனர் என்று வரலாறு கூறுகிறது.) ஆகவே என் அருமை நண்பர் களே, ஏற்கெனவே உங்கள் துணை கொண்டு என் மனைவி ம க் களை வீட்டுக்கனுப்பிவிட்டேன். அவ ளாவது உறுதியோடு சென்ருள். நீங்கள் இன்னும் அழுது புலம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். பெண் குலத்துக்கிருந்த நெஞ்சுரம்கூட ஆண்களாகிய உங்க ளுக்கு இல்லாமல் போய்விட்டதா? என்று சாக்ரடிஸ் சொன்னவுடன் ஒருவாறு அனைவரும் அழுகையை நிறுத்தினர். . (பிறகு எல்லோரும் ஒருமுகமாகச் சேர்ந்து சாக் ரடீஸ்! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர்.) சாக்ரடீஸ் : என் அருமை நண்பர்களே! நான் உங்களுக்கு இவ்வளவு நாள் சொல்லி வந்ததைச் செய்தால் போதும். உங்களுடைய உள்ளங்களை துய்மையாக்கிக் கொள்ளுங்கள். அ த னே த் தவருமல் செய்தால் மற்றவைகள் தாமே வரும். இப் போது நீங்கள் எனக்கு எவ்வித உறுதியும் செய்யாடி 栽 லிருந்தாலும், உங்கள் வாழ்வை நான் இவ்வளவு. நாள் சொன்னபடி நீங்கள் உங்கள் மனத் தூய்மை யைப் பாதுகாத்து வந்தால் என் குடும்பத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/115&oldid=1331539" இலிருந்து மீள்விக்கப்பட்டது