பக்கம்:விஷக்கோப்பை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

விஷக்கோப்பை


118 விஷக்கோப்பை

ளனைவருமே அழுதனர். அவருக்கு இந்த கெதி வந்த தென்று அவர்கள் அழவில்லை. அவரை விட்டுப் பிரிகின்ருேமே, அவர் நம்மை விட்டுச் செல்கின்ருரே என்பதற்காக அழுதார்கள். ஆனால், சாக்ரடீஸ் அழ வில்லை. அவரைத் தவிர மற்ற அனைவருமே அழுதனர். சிறை சிப்பந்திகளும் அதிகாரிகளும் அழுதார்கள். சாக்ர : நண்பர்களே! என்ன செய்துக் கொண் டிருக்கின்றீர்கள். ஆண்களாகிய நீங்கள் பெண்களைப் போல் அழுவது அழகன்று. என் ஆன்மா உடலே விட்டுப் பிரியும்போது நீங்கள் மெளனமாயிருக்க வேண்டும். அன்பு கூர்ந்து என்னை அமைதியாக சாக விடுங்கள் என்று நடந்துக் கொண்டே இருந்தவர், கால் மரத்துப் போனதை யுணர்ந்து படுக்கையில் மல்லாந்து படுத்துக் கொண்டார். (அந்த விஷம் பாதத்திலிருந்து உடலின் ஒவ்வொரு பகுதியாக மரத்துப் போகும்படிச் செய்யுமாம்) அதனால் அந்தச் சிறையதிகாரி அடிக்கடி அவர் பாதங்களை அமுக்கிப் பார்த்துக் கொண்டே, தெரிகிறதா - தெரிகிறதா என்று கேட்டுக் கொண்டே வந்தான். ஒரிரு நிமிடங் களில், தெரியவில்லை என்ருர் சாக்ரடீஸ், இப்படி உடல் வரவர மரத்துப் போய்க்கொண்டே இருந்தது. மார்பு வரையில் இப்படி மரத்துப் போனதும் அவரே அடிக்கடித் தொட்டுப் பார்த்துக்கொண்டு, 'நான் போய்விடுவேன்' என்று சொல்லி விட்டு, கிரிடோ! நான் என் எதிர் வீட்டுக்கார அல்கபிஷேயஸ் என்ப வனுக்கு ஒரு கோழி கடன் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்து விடுங்கள் என்ருர். அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/123&oldid=1331506" இலிருந்து மீள்விக்கப்பட்டது