பக்கம்:விஷக்கோப்பை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

விஷக்கோப்பை


சொல்லாமல் சொல்லிச் சென்றுவிட்டான் சொற் செல்வன். நாமறிந்த மட்டில் உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள் சிலரில் தலே சிறந்தவன் சாக்ரடிஸ். செடியில் மலர்ந்த மலர் கொய்வாரின்றி உதிர்ந்து உலர்ந்துவிடும் தன்மைப் போன்றதல்ல சாக்ரடீஸ் உயிர். அவனுடைய ஒரே ஒரு உயிர் எத்தனையோ உயிர்களை மேம்பாடடையச் செய்திருக்கிறது. அந்த மேன்மக்களை இனி காலந்தான் காப்பாற்ற வேண்டும். இறந்தவன்மேல் ஆணையாக அவன் விட்டுச் சென்ற அறிவாலயத்தைக் காப்போமாக! அவன் பொன்னடி களைப் போற்றுவோமாக. நமக்கும் ஒர் நாள் இந்த முடிவுதான் என்று கண்ணிர் வழிகாட்ட அனைவரும் கலைந்து சென்றனர். முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/127&oldid=1331578" இலிருந்து மீள்விக்கப்பட்டது