பக்கம்:விஷக்கோப்பை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

11


சி. பி. சிற்றரசு 11 மன்னிப்புக் கேட்டு வாக் ೧5ಿಕarr” - என்று . நினைத்து ஏளனம் பேசிய ஈரமில்லா நெஞ்சினர் அவன் சமாதிக்கடியிலேயே மெளனம் சாதித்துவிட்டனர். தோல்வியாருக்கு,” என்பதை இன்னும்,ஏதன்ஸ் நீதிமன்றத்தின் முன் கட்டப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மணியை யாரும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. அது அன்றே, தோல்வி, மெலிடஸ், அனிடஸ், லகோன் என்ற மாபாதகர்களுக்கு, வெற்றி, நமது வீரனும் சாக்ரடீசுக்கு என்று பலமுறை தன் நாவால் பகர்ந்து விட்டது. இனியும் சந்தேகமா? ஏதன்ஸ் நீதிமான் களே! என்று யாரும் இப்போது கேட்கத் துணிய மாட்டார்கள். சாக்ரடீஸ் நஞ்சுண்டு இறந்த நாளன்று நடத்திய சவ அடக்கத்தின்போதே, சாலை களையெல்லாம் சாகரமாக்கி விட்டார்கள் மக்கள் தம் கண்ணிரால், சாக்ரடீசாகிலும் தன் கொள்கைக் காக நஞ்சுண்டு மாண்டான் அவனைக் கொல்ல முன் வந்த முடக்கொள்கைகள் அவ்வளவும் தானகவே செத்துவிட்டன. தான் செத்துக் காட்டி தன் எதிரி களின் எண்ணத்தைச் சாகடித்தான். - நீதியைத் தேடிச் சென்றவர்களைத் தைரியமாக அழைத்துச் சென்றவன் சாக்ரடீஸ். அதலைாய பலனை மட்டும் மக்களுக்குப் பங்கிட்டளித்துத் தண்டனையை மாத்திரம் தான் ஒருவனே ஏற்றுக்கொண்ட தைரிய வான். சேயின் நன்மைக்காக மருந்துண்ணும் தாயின் குணம் படைத்த தலைவன். அநீதிக்குச் சாகா வரமிருந் தாலும், அதன் நிழலில்கூட நிற்க அஞ்சிய அறவோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/16&oldid=1331399" இலிருந்து மீள்விக்கப்பட்டது