பக்கம்:விஷக்கோப்பை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

19


சி. பி. சிற்றரசு - 19 மகிழ்ச்சி அடைகிறேன். குற்றம் சுமத்தி உங்கள் முன்பாக நிறுத்தப் பட்டிருக்கும் என்னை ஒரு சாமர்த்தியமான் பேச்சாளி என்று அவரே கண்ணிய மாக ஒப்புக்கொண்டதற்காகப் பெருமைப்படுகிறேன். இங்கே நான் நல்ல பேச்சாளி என்று குறிப்பிடுவது உண்மை பேசுபவனையே குறிப்பிடுகிறேன். அந்த வகையில் நான் அதை ஒப்புக்கொள்கிறேன். நான் வாய் திறந்தால் பொய் இருக்கும் இடம் தெரியாமல் ஒடி ஒளிந்துகொள்ளும். அநீதி என் வழியில் குறிக் கிடுவதில்லே. அக்ரமங்களேச் சகிக்க என் மனம் ஒப்புக் கொள்வதில்லை. டம்பக்காரர்களை நான் என்றும் போற்றிப் புகழ்ந்ததில்லை. பணக்காரர்களிடம் நான் எப்போதும் முகமன் பேசி என் காரியங்களை சாதித்துக் கொள்ள எண்ணியதில்லை. நான் பட்டினி கிடந்து சாக நேர்ந்தாலும் உண்மையல்லாத ஒருவனிடம் நெருங்கியதில்லை. இவைகளேயன்றி நான் ஒரு நல்ல பேச்சாளியல்ல என்பதை என்னல் நிரூபிக்க முடியும். ஏன், நான் இப்போது பேசுவதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லும் ஒரு சாதாரண மனிதனை நல்ல பேச்சாளி கள் பட்டியலில் சேர்க்க எண்ணில்ை நான் ஒரு நல்ல பேச்சாளியாக மாத்திரமல்ல, அதைவிடப் பல படிகள் மேலான ஆவேச பேச்சாளி என்றே ஒப்புக் கொள்கிறேன். z " - - t - இரண்டாவதாக ്മേഖ சுமத்தப்பட்டிருக்கும் குற்றம்:-நான் ஆகாயத்தைப் பற்றியும், நிலத்தின் அடிவாரத்தைப் பற்றியும் ஆராய்வதால், நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/24&oldid=1331407" இலிருந்து மீள்விக்கப்பட்டது