பக்கம்:விஷக்கோப்பை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

27


சி. பி. சிற்றரசு 27 இதைப்போலவேதான், நான் கவிஞர்கள், அரசி யல்வாதிகள், மேதைகள் ஆகியவர்களைப்பற்றி எண்ணங் கொண்டிருந்தேன். அ த ைல் தா ன் கவிஞர்கள் சார்பாக மெலிடசும், அரசியல்வாதிகள் சார்பாக அனிடசும், மேதைகள் சார்பாக லைகோனும் வழக்குத் தொடுத்தார்கள். நான் நெருங்கிப் பார்த்த மேற்சொன்ன கவிஞர்களும், மேதைகளும் அரசியல் வாதிகளுமாகியவர்களைப்பற்றி நான் மிக மலிவான கருத்தைக்கொள்ள வேண்டி வந்தது. குதிரைமேல் ஏருமல் எப்படி குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ளமுடியாதோ பு ல் லாங் குழலைத் தொடாமல் எப்படி அதை இசைக்க கற்றுக்கொள்ள முடியாதோ! நீரில் இறங்காமல் எப்படி நீந்தத் தெரிந்துகொள்ளமுடியாதோ ! அதைப் போலவே நான் ஆராய்ச்சியில் இறங்காமல் எப்படி ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும்? அந்த முயற்சியில் நான் இறங்கியபோது இது வரை ஏதன்ஸ் மாநகரம், தவருக நினைத்துக்கொண் டாடிக் கொண்டிருந்த எந்த உண்மையான பிறவி மேதையையும் நான் காணமுடியவில்லை. பிறரின் அறியாமையால், மேதை எனக் கொண்டாடப்பட்ட ஒருவனே, என் உள்ளம் உண்மையான மேதை என ஒப்புக்கொள்ள மறுத்தது. அதனல் நான் பல கேள்விகள் மூலம் அவர்களைத் திருத்த முற்பட்டேன். அவர்களுடைய வெளி வேடங்களில்ை, அவர்கள் சொல்வதெல்லாம் மக்கள் அறிவுக்கே எட்டாத ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/32&oldid=1331415" இலிருந்து மீள்விக்கப்பட்டது