பக்கம்:விஷக்கோப்பை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

விஷக்கோப்பை


38 விஷக்கோப்பை

பகைத்துக் கொண்டேன் என்பதால் குற்றவாளியா? இந்த எளியவன் சொல்வதைப் பெருவாரியானவர்கள் நம்பமுடியாததால் நான் குற்றவாளியா? குற்றம் செய்தவர்கள் யாரோ, குருதியைக் கொட்டுபவர்கள் யாரோ, கள்ளர்கள் யாரோ, காவலில் கண்ணிர் சிந்துபவர்கள் யாரோ, துடுக்கர்களும் துன்மார்க்கரும் யாரோ, தூக்கு மரத்தில் துடிக்கவேண்டியவர்கள் யாரோ, காலமே! நீயே பதில் சொல்ல வேண்டும். நீதியே! நின்னையே வேண்டுகிறேன். ஏதன்ஸ் நகர நீதிமான்களே! துலாக்கோல்போல் நீதி வழங்க நாட் டின் பரிபாலனத்தை உங்கள் தடப்புயத்தில் தாங்கி நிற்கும் தயாளர்களே! பிறந்த மண்ணின் பெரு மையை நிலை நாட்ட இறந்தவர்களின் சந்ததியாய் வீற்றிருக்கும் விவேகிகளே! என்னை மன்னித்து வெளியே அனுப்பினலும் என் தர்க்கவாதத்தை மீண்டும் என் உயிர் உள்ளளவும் செய்தே தீருவேன். என்று தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நீங்கள் எள்ளளவும் எனக்குத் தீங்கு விளைவிக் கும்படி நான் நடந்துகொண்டேன் என்பதை நான் ஒரு நாளும் ஒப்பமாட்டேன். மரண தண்டனை விதிப்பீர்களாயின், அது ஒருபோதும் எனக்குக் கெடுதலே விளைவிக்காது. அதற்குப் ப தி லாக நாட்டைத் துறத்தல் சிறைப்படுதல் முதலிய தண்டனைகளுக்கு உள்ளாவதாக நான் கூறுவது சரி யன்று. உண்மையில் மற்ற எல்லாவற்றையும்விட என் உயிரின்மேல் நான் கொள்ளும் ஆசையே பல தீமைகளை விளைவிக்கும். நான் எந்தெந்த கருத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/43&oldid=1331426" இலிருந்து மீள்விக்கப்பட்டது